Search results for 'ஜெயமோகன் '

ஆசானுக்கு விண்ணப்பம்!

15 Nov

எழுத்துலக ஆசான் ஜெயமோகன் அவர்களால் பாராட்டப்படும்போதே நினைத்தேன், இந்த ஆளும் விரைவில் கடுக்காய் கொடுப்பார் என்று. அந்த அளவுக்கு தொல்.திருமாவளவனை உச்சியில் வைத்துக் கொண்டாடி இருந்தார் ஆசான்.

//நான் திருமாவளவன் அவர்களை பல ஆண்டுகளாக அறிவேன். அவருடைய உருவாக்கக் காலகட்டத்தில் உடனிருந்தவர்களையும் அறிவேன். நான் அறிந்தவரை, தனிப்பட்ட முறையில் பண்பாளர், மானுடரிடையே மேல்-கீழ்நிலை நோக்காதவர், உண்மையான வாசிப்பும் அதிலிருந்து உருவாகும் அறிவார்ந்த தகுதியும் கொண்டவர், நல்லிணக்க அரசியலில் நம்பிக்கை கொண்டவர். எந்நிலையிலும் குடியாட்சி நெறிகளை மீற விழையாதவர், பொருளியல் ,சமூகவியல் பிரச்சினைகள் அனைத்திலுமே ஒட்டுமொத்தநோக்கும் நெடுங்காலப்பார்வையும் கொண்டவர். ஆகவே இன்றிருக்கும் தமிழக அரசியல்வாதிகளில் ஐயமின்றி அவரே தலையாயவர்//

இப்படி அவரை தலையாயவராகக் கொண்டாடியபோதே (மே 12, 2019) கொஞ்சம் உறுத்தியது. இவரால் பாராட்டப்பட்ட ராமசந்திர குஹா, அரவிந்த் கேஜ்ரிவால், அண்ணா ஹசாரே, சீமான், ராகுல் காந்தி ஆகியோரின் நிலைப்பாடுகளைப் பார்த்தவர்களுக்கு திருமாவளவன் என்ன ஆகப் போகிறாரோ என்ற அச்சம் ஏற்படுவதில் பிழையில்லை. Continue reading

முதுமையிலும் தளரா செயல்வீரர்

14 Feb

திரு. ஜி.வீரப்பிரகாசம்

(1937- 2019 பிப். 14)

குடும்ப நண்பரும், பொறியாளருமான திரு.வீர.ராஜமாணிக்கத்தின் தந்தையார், திரு. ஜி.வீரப்பிரகாசம் (82) அவர்கள் இன்று காலை (14.02.2019) இறைவனடி சேர்ந்தார். காந்திய நெறியாளரான அவர், தமிழ்நாடு சர்வோதய சங்கத்தின் மாநிலத் தலைவராக 1994 முதல் 1997 வரை பதவி வகித்தவர். Continue reading

இனி யாரிடம் கேட்பேன்?

30 Nov

.
(கடந்த நவ. 26-இல் மறைந்த நண்பர் 
என்.டி.என்.பிரபுக்கு Ntn Prabhu 
எனது கண்ணீர் அஞ்சலி)…

.
1998 ஆகஸ்ட் மாதம் சென்னையில் விஜயபாரதம் வார இதழில் உதவி ஆசிரியராக நான் சேர்ந்தேன். அங்கு சென்றவுடன் முதலாவதாக எனக்கு நண்பர் ஆனவர் திரு. என்.டி.நரசிம்ம பிரபு. அங்கு பக்க வடிவமைப்பாளராகப் பணி புரிந்துகொண்டிருந்தார். அப்போதெல்லாம் கையில் எழுதிக் கொடுப்பதை தட்டச்சு செய்து, பிழை திருத்தி, பக்கத்தில் சேர்க்க வேண்டும். அந்தப் பணியை மிகவும் வேகமாகவும், துல்லியமாகவும் செய்வார் பிரபு.

அவரது குடும்பமே சங்கக் குடும்பம். அவரும் பண்பட்ட ஸ்வயம்சேவகர். அதனால்தான், விஜயபாரதம் அலுவலகப் பணியில் அவர் நீண்டகாலம் பணியாற்ற முடிந்தது. திருநின்றவூரிலிருந்து மின்சார ரயிலில் சென்னை சென்ட்ரல் வந்து, அங்கிருந்து தாம்பரம் ரயிலில் பயணித்து சேத்துப்பட்டு வர வேண்டும். ரயில்கள் உடனுக்குடன் கிடைத்தால் சுமார் 1.30 மணி நேரப் பயணம். மிகச் சரியாக 9 மணிக்குள் வந்துவிடுவார். Continue reading