எழுத்துலக ஆசான் ஜெயமோகன் அவர்களால் பாராட்டப்படும்போதே நினைத்தேன், இந்த ஆளும் விரைவில் கடுக்காய் கொடுப்பார் என்று. அந்த அளவுக்கு தொல்.திருமாவளவனை உச்சியில் வைத்துக் கொண்டாடி இருந்தார் ஆசான்.
//நான் திருமாவளவன் அவர்களை பல ஆண்டுகளாக அறிவேன். அவருடைய உருவாக்கக் காலகட்டத்தில் உடனிருந்தவர்களையும் அறிவேன். நான் அறிந்தவரை, தனிப்பட்ட முறையில் பண்பாளர், மானுடரிடையே மேல்-கீழ்நிலை நோக்காதவர், உண்மையான வாசிப்பும் அதிலிருந்து உருவாகும் அறிவார்ந்த தகுதியும் கொண்டவர், நல்லிணக்க அரசியலில் நம்பிக்கை கொண்டவர். எந்நிலையிலும் குடியாட்சி நெறிகளை மீற விழையாதவர், பொருளியல் ,சமூகவியல் பிரச்சினைகள் அனைத்திலுமே ஒட்டுமொத்தநோக்கும் நெடுங்காலப்பார்வையும் கொண்டவர். ஆகவே இன்றிருக்கும் தமிழக அரசியல்வாதிகளில் ஐயமின்றி அவரே தலையாயவர்//
இப்படி அவரை தலையாயவராகக் கொண்டாடியபோதே (மே 12, 2019) கொஞ்சம் உறுத்தியது. இவரால் பாராட்டப்பட்ட ராமசந்திர குஹா, அரவிந்த் கேஜ்ரிவால், அண்ணா ஹசாரே, சீமான், ராகுல் காந்தி ஆகியோரின் நிலைப்பாடுகளைப் பார்த்தவர்களுக்கு திருமாவளவன் என்ன ஆகப் போகிறாரோ என்ற அச்சம் ஏற்படுவதில் பிழையில்லை. Continue reading
You must be logged in to post a comment.