Tag Archives: முகநூல்

தாமரையும் நாணயமும்…

9 May

1968-1971 காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 20 பைசா நாணயம் இது. 

ஒருபுறத்தில் அசோகச் சின்னம், பாரத் என்று ஹிந்தியிலும் இந்தியா என்று ஆங்கிலத்திலும் இடம் பெற்றுள்ளன. மறுபுறத்தில் தாமரைப்பூவுடன் 20 பைசா மதிப்பும் அச்சிட்ட ஆண்டும், ஆலையின் குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன.  

Continue reading

வீர் பால் திவஸ் / வீரச் சிறுவர்கள் நாள்

26 Dec

இன்றைய நாளை (டிச. 26) வீரச் சிறுவர்கள் நாளாகக் கொண்டாடி இருக்கிறது இந்திய அரசு. 

அது என்ன வீரச் சிறுவர்கள் நாள்? 

சீக்கிய குரு கோவிந்த சிங்கின் இரு மகன்களான ஜொராவர் சிங், ஃபதே சிங் இருவரும் உயிருடன் கல்லறையில்  புதைக்கப்பட்ட தினம் இன்று!

ஏற்ற தருமம் காக்க சிறு வயதில் உயிரை ஈந்த இளம் தளிர்கள் இவர்கள்.

Continue reading

யாருக்கு வாக்களிக்க வேண்டும்?

18 Feb

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: யாருக்கு வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்கக் கூடாது?

தமிழகத்தில் நாளை (பிப். 19) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இது.

இதில் தேர்வாகும் வார்டு உறுப்பினர்கள் (பிப். 22- இல் முடிவுகள் தெரியும்). தங்கள் உள்ளாட்சி அமைப்பின் தலைவராக, தங்களுக்குள் மறைமுகத் தேர்தல் வாயிலாக (மார்ச் 4- இல்) ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

மாநிலம் முழுவதும், 31ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நாளை வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. 2.79 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற இருக்கிறார்கள்.

மாநில மக்கள் தொகையில் (7.22 கோடி) 2021 நிலவரப்படி வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 6.3 கோடி. இதில் நகர்ப்புறத்தில் உள்ள வாக்காளர்களின் பங்கு சுமார் 45 சதவிகிதம். மீதமுள்ள 55 சதவிகித மக்கள் கிராமப் புறங்களில் வாழ்கிறார்கள்.

Continue reading