`வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண்‘
-என்று பாடுவார் அப்பர் பெருமான் (திருத்தாண்டகம்- பதிகம்: 6.87)
நமது பண்பாட்டில் மொழி பெற்றுள்ள பேரிடத்துக்குச் சான்று பகர்கிறது இப்பாடல். அது மட்டுமல்ல, கண்ணுதற் கடவுளே கழகமோடு அமர்ந்து தமிழாய்ந்த பெருமையுடையது தமிழ் நிலம். ஈசனே தமிழ் அகப்பொருளுக்கு இலக்கணம் எழுதினார் என்பதும் நம் நம்பிக்கை. ஈசனின் மகனான முருகனோ, செந்தமிழ்க் கடவுளாகவே போற்றப்படுகிறார்.
மொழி என்பது நமது பண்பாட்டின் பிரிக்க முடியாத அம்சம். இந்தப் பண்பாடே, மொழியாலும், வழிபாட்டு முறைகளாலும் ஊடாடி நெய்த சேலை போலத்தான் காட்சி தருகிறது.
இந்த பரந்த பாரத தேசத்தில் பல வகையான மொழிக் குடும்பங்களை சேர்ந்த 400-க்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. குறைந்தபட்சம் பத்தாயிரம் பேருக்கு மேல் பேசும் மொழிகள் மட்டுமே தனி மொழி என்று மொழியியல் அறிஞர்களால் அங்கீகரிக்கப்படுகின்றன. இந்த மொழிகளிலும் பெருமளவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 22. அவற்றை நமது அரசு அலுவல் மொழிகளாக அங்கீகரித்திருக்கிறது. Continue reading
You must be logged in to post a comment.