-பி.எஸ்.எம்.ராவ்
எந்த ஒரு நாட்டிலும் முதியவர்களின் எண்ணிக்கை நாட்டின் வளர்ச்சியுடன் தொடர்புடைய காரணியாக உள்ளது. அவர்களது கடைசிக்கால வாழ்க்கை நலமாக இருப்பதை உறுதிப்படுத்தும் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலவாழ்வுத் திட்டங்களே நாட்டின் உயர்வை வெளிப்படுத்தும்.
இந்தியாவில் முதியோரின் எண்ணிக்கை அதிவேகமாகப் பெருகி வருகிறது. 1961இல் 2.47 கோடியாக இருந்த முதியோரின் எண்ணிக்கை 2011இல் 10.4 கோடியாகவும், 2021இல் (முன்கூட்டிய கணிப்பு) 13.8 கோடியாகவும் அதிகரித்தது. 2031இல் இது 19.4 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி விகிதம் 5.6 % (1961), 8.6 % (2011), 10.1 % (2021), 13.1 % (2031) ஆகும். இதே வளர்ச்சி வேகத்துடன் முதியோருக்கான அரசு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.
Continue reading
You must be logged in to post a comment.