-மனீஷ் திவாரி
இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் ஜனநாயகரீதியிலான தேர்தல்களில் 400 கோடி மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். வழக்கமாக இந்தத் தேர்தல் திருவிழா ஜனநாயகத்தின் வெற்றியாகக் கொண்டாடப்படும். ஆனால், இன்றைய காலத்தின் நவீனத் தொழில்நுட்ப வரவான செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) நிகழ்த்தும் அதிரடிச் செயல்பாடுகள் தேர்தல் களத்தை கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன.
நமது பழைய தேர்தல் முறைகளால் ஏற்படும் பாதிப்பல்ல இது. காலாவதியாகிவிட்ட வாக்காளர் பதிவு முறை, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தேர்தல் மேலாண்மை மென்பொருள் ஆகியவற்றில் உள்ள பலவீனங்கள் துஷ்பிரயோகம் செய்வதற்காகக் காத்திருக்கின்றன. ஆனால் அதைவிட சிக்கலான ஆபத்து உருவாகிக் கொண்டிருக்கிறது.
இன்று பரவலாக புழக்கத்தில் உள்ள சமூக ஊடகங்கள், கட்டுப்பாடற்ற தகவல் பெருக்கத்திற்கு வழிவகுத்துள்ளன. இப்போது எவரும் மிகக் குறைந்த செலவில் தங்கள் கருத்துகளைப் பதிவிட முடியும். பன்முக உள்ளடக்கத்தைக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (ஜெனரேட்டிவ் ஏ.ஐ.) இதை மேலும் எளிதாக்கி இருக்கிறது. இது முதல் அதிரடி மாற்றம் ஆகும்.
Continue reading
You must be logged in to post a comment.