Tag Archives: மரபுக்கவிதை

வையத்தலைமை கொள்!

15 Dec

பல்லவி

வல்லமை பெற்றிடுவோம் – பாரில்

வல்லரசாய் எழுவோம்!

நல்லவை புவியில் நிலைத்திட வேண்டின்

நல்லரசாய் அமைவோம்!

 

அனுபல்லவி

அல்லவை நீக்கிடுவோம் – பாரில்

அறத்தை நாட் டிடுவோம்!

நல்லவை புவியில் நிலைத்திட வேண்டின்

வல்லரசாய் எழுவோம்!

(வல்லமை பெற்றிடுவோம்!)

Continue reading

நவசக்தி – கவிதைகள்

16 Oct

 

நூன்முகம்

அன்புடையீர்,

வணக்கம்.

இந்த ஆண்டு நவராத்திரியை ஒட்டி முகநூலில் தினம் ஒரு மரபுக்கவிதையைப் படைத்து வந்தேன். இதில் ஏற்கனவே எழுதிய கவிதைகளும் உண்டு; புதிதாக எழுதிய கவிதைகளும் உண்டு. (அவை இத்தளத்தில் ஏற்கனவே உள்ளன). அவற்றின் தொகுப்பு, நவராத்திரியின் நிறைவான விஜயதசமியை அடுத்து, இதோ இன்று உங்கள் பார்வைக்கு…

குறிப்பு: 

நவசக்தி- புதிய சக்தி / சக்தியின் ஒன்பது வடிவங்கள்.

***

Continue reading

சரஸ்வதி வந்தனம்

15 Oct

அன்னப் பறவை அவள் வாகனம்.
இனிய வீணை அவள் சாதனம்.
வெண் தாமரை அவள் ஆசனம்.
அறிவே அவளது பூசணம்.

ஜபமாலை அவள் நூதனம்.
ஞானம் அவளது சீதனம்.
கல்விக்கே அவள் காரணம்.
கலைகள் அவளது பூரணம்.

Continue reading