அன்றாடம் உழைத்துக் களைக்கும் உழவர்களும் தொழிலாளர்களும் பண்டிகைக் காலங்களில் தான் தங்கள் வாழ்வின் பொருளைப் பெறுகிறார்கள். அதற்காக சமுதாய நோக்கில் தாமாக வடிவமைந்தவையே பண்டிகைகள். இந்தப் பண்டிகைகளில், இயற்கையான சமூக வழிபாடாக அமைந்த பொங்கல் பண்டிகை தலையாயது.
இந்த உலக இயக்கத்திற்கும் விவசாயத்திற்கும் ஆதாரமாக இருக்கும் சூரியனையே கடவுளாக்கி வழிபடும் பண்டிகை தான் பொங்கல் பண்டிகை. நாம் வாழும் உலகில் இரவுக்காலம் குறைந்து பகல் காலம் அதிகரிக்கும் சூரியனின் திசை மாற்றம் தை மாதம் நிகழ்கிறது.
இந்த மாற்றத்தால் அசதி குறைந்து சுறுசுறுப்பு பெருகுகிறது. எனவே தான் இந்த மாற்றத்தை உலக உயிர்கள் வரவேற்கின்றன. இதனை வரவேற்கும் விதமாகவே நாடு முழுதிலும் மகர சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை தமிழகத்தில் பொங்கல் திருவிழாவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.
Continue reading
You must be logged in to post a comment.