தாமரையும் நாணயமும்…

9 May

1968-1971 காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட 20 பைசா நாணயம் இது. 

ஒருபுறத்தில் அசோகச் சின்னம், பாரத் என்று ஹிந்தியிலும் இந்தியா என்று ஆங்கிலத்திலும் இடம் பெற்றுள்ளன. மறுபுறத்தில் தாமரைப்பூவுடன் 20 பைசா மதிப்பும் அச்சிட்ட ஆண்டும், ஆலையின் குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன.  

Continue reading

குறிஞ்சிக் கடவுளும் கௌமாரமும்

8 May

திருமுருக வழிபாடு தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவது. சங்க இலக்கிய நூல்களுள் முதலாவதான திருமுருகாற்றுப்படையின் நாயகரே முருகன் தான். இந்நூலில் முருகனுக்குரிய அறுபடை வீடுகளும் தகுந்த முறையில் போற்றப்பட்டுள்ளன.

பழந்தமிழகத்தின்  நிலப்பரப்பு ஐவகையாகப் பகுக்கப்பட்டிருந்ததை தொல்காப்பியம் கூறுகிறது. அது (இடம்) முதற்பொருள் எனப்பட்டது. தொல்காப்பியம், பொருளதிகாரம், அகத்திணை இயலின் ஐந்தாம் பாடல், ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய முதன்மைத் தெய்வங்களைச் சுட்டுகிறது.

Continue reading

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

5 May

பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மருந்து ஆராய்ச்சி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனகா கடந்த வாரம் சமர்ப்பித்த அறிக்கை, மருத்துவ உலகில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது.  

கரோனா தீநுண்மிக்கு எதிரான தங்கள் தயாரிப்புத் தடுப்பூசியான  ‘வேக்ஸெர்வியா’ (இந்தியாவில் கோவிஷீல்டு) காரணமாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டணுக்கள் குறைதல் உள்ளிட்ட அசாதாரணமான பக்க விளைவுகள் மிகச் சிலருக்கு ஏற்பட வாய்ப்புண்டு என்ற அஸ்ட்ரா ஜெனகா  நிறுவனத்தின் ஒப்புதல், இப்போது உலகம் முழுவதிலும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.  

2019ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து பரவிய கரோனா தீநுண்மி, காற்றின் மூலமாக பலருக்கு விரைவாகப் பரவி, உடலின் சுவாச மண்டலத்தைச் செயலிழக்கச் செய்து மரணத்தை ஏற்படுத்திய கொடிய பெருந்தொற்றாகும்.

Continue reading