பிகார் மாநிலத்திலுள்ள சாசாராம் ரயில்நிலையத்தின் முதல் இரு நடைமேடைகள் அதிகாலையிலேயே களைகட்டிவிடுகின்றன. அங்கு குழுக்களாக அமர்ந்திருக்கும் இளைஞர்கள் தங்களுக்குள் கேள்வி கேட்டு பதில் சொல்லிக் கொள்கிறார்கள்; பத்திரிகைகளைப் படிக்கிறார்கள்; போட்டித் தேர்வுப் புத்தகங்களைப் படிக்கிறார்கள். வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளுக்குத் தயாராகிறார்கள்.
அதிகாலையிலேயே அவர்களது சுறுசுறுப்பு ரயில்நிலையத்தைச் சூழ்ந்து கொள்கிறது. அந்த ரயில் நிலையத்திலுள்ள ஊழியர்கள், பணியாளர்களுக்கு அவர்கள் செல்லப் பிள்ளைகள். ‘ரயில்நிலையத்தின் மாணவர்கள்’ என்று, அவர்களுக்கு ரயில்நிலைய மேலாளர் சார்பில் சிறப்பு அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
சாசாராம், பிகார் மாநிலத்தின், ரோத்தார் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி; மொத்த மக்கள்தொகை 1.5 லட்சம். பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் இந்நகரம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மொகலாயப் பேரரசர் ஹுமாயூனை வென்று குறுகிய காலம் ஆட்சி செய்த சூர் வம்ச மன்னர் ஷேர் ஷா சூரியின் (1486 – 1545) தலைநகரமாக இருந்த பெருமைக்குரியது சாசாராம். தவிர, பிரபல பட்டியலினத் தலைவர் பாபு ஜெகஜீவன்ராமின் சொந்த ஊரும் கூட.
செயற்கை ஏரியின் மையத்தில் நிறுவப்பட்ட ஷேர் ஷா சூரியின் நினைவுச்சின்னம் இந்த ஊரில் இருக்கிறது. பெஷாவரில் துவங்கி, கொல்கத்தாவில் முடியும் தெற்கு ஆசியாவின் மிக நீண்ட மைய நெடுஞ்சாலையை (கிராண்ட் டிரங்க் ரோடு) உருவாக்கியவர் இவரே.
Continue reading →
Tags: இளைஞர்மணி, கல்வி, சமூகம், தினமணி
You must be logged in to post a comment.