மனித சமுதாயத்தின் வளர்ச்சிப்பாதையில் இடைவிடாத முயற்சியும் தேடலும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த மகத்தான கண்டுபிடிப்புகள், சிக்கிமுக்கிக் கல்லும், கூர்மையான கல்லும் தான். அங்கிருந்து தான் மனித நாகரிகத்தின் பயணம் தொடங்கியது. இன்று வானளாவிய கட்டடங்களும், விண்ணை அளக்கும் விண்கலங்களும், விதவிதமான உணவுப் பண்டங்களும், உலகையே அழிக்கவல்ல போர் ஆயுதங்களும் படைத்தவனாக மனிதன் மாறி இருக்கிறான்.
இந்த மாற்றம் உடனடியாக ஏற்பட்டுவிடவில்லை. மனிதனின் அடுத்த மிக முக்கியமான கண்டுபிடிப்புகளாக எண்களையும், மொழிகளையும் கூறலாம். அடுத்த சில ஆயிரம் ஆண்டுகளில், மனிதனால் வட்டமும், பூஜ்ஜியமும், சக்கரமும் கண்டறியப்பட்டன. இவைதான் இத்தனை காலமாக, முந்தைய உலகிலிருந்து தற்போதைய உலகு வரை நம்மை வழிநடத்தி வந்திருக்கின்றன.
Continue reading
You must be logged in to post a comment.