கடந்த வாரம் வெளியான மூன்று மாநில தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் பெரிய அளவில் கவனிக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு இங்கு பெரும் கவனத்தை ஈர்த்திருந்ததால், மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.
நாட்டின் ஏழ்மையான வடகிழக்கு சகோதரிகள் என்று அழைக்கப்படும் ஏழு மாநிலங்களும் புவியியல்ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிஸோரம், சிக்கிம், மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய இந்த 7 மாநிலங்களுடன் அஸ்ஸாம் மாநிலத்தையும் சேர்த்து 8 மாநிலங்கள் இந்த பிராந்தியத்தில் உள்ளன.
Continue reading
You must be logged in to post a comment.