அக்கினிக் குஞ்சுகள் – நூல் வெளியீடு

24 Mar

பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அருட்செல்வம் நா. மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் (21.03.2023), ‘அக்கினிக் குஞ்சுகள்’ நூல் வெளியிடப்பட்டது. நூலை என்ஜிஎம்  கல்லூரித் தலைவர் திரு. பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட, திரு. ம.சீனிவாசன் பெற்றுக் கொண்டார். அருகில் திரு. சங்கர் வாணவராயர் உள்ளார்.

செய்திச் சுருக்கம்:

மறைந்த தொழிலதிபரும் கல்வியாளருமான அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா கடந்த 21.03.2023, செவ்வாய்க்கிழமை, பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. என்.ஜி.எம். கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகித்தார். சக்தி குழுமத்தின் தலைவர் ம.மாணிக்கம் வரவேற்றார். என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர்கள் ம. பாலசுப்பிரமணியம், ம.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில், அருட்செல்வர் நா.மகாலிங்கம் எழுதிய ‘வாழ்வுக்கு வந்த வள்ளலார்’, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் மொழிபெயர்த்த கலீல் ஜிப்ரானின் ‘மனித குமாரன் இயேசு’, வ.மு.முரளியின் ‘அக்கினிக் குஞ்சுகள்- 3 தொகுதிகள்’ ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன. இவை அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் வெளியீடுகளாகும்.

‘அக்கினிக் குஞ்சுகள்’ நூல் தொகுப்பை என்.ஜி.எம். கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட, நா.மகாலிங்கத்தின் இளையமகன் ம.ஸ்ரீனிவாசன் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் சொற்பொழிவாளர் சுகி.சிவம் சிறப்புரையாற்றினார். அந்தச் செய்தியும் படங்களும் இங்கே உள்ளன.

பொள்ளாச்சி, மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அருட்செல்வம் நா. மகாலிங்கம் நூற்றாண்டு விழா காட்சி.

Leave a comment