தமிழின் தற்கால எழுத்தாளர்களில் முதலிடம் வகிப்பவர் திரு. ஜெயமோகன். சிறுகதை, புதினம், வாழ்க்கை வரலாறு, சிறுவர் இலக்கியம், கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம், திரைக்கதை வசனம் எனப் பல துறைகளிலும் எழுதிக் குவித்திருப்பவர். இவர் இதுவரை எழுதியுள்ள 100-க்கு மேற்பட்ட நூல்களைப் படிக்கவே நமக்கு நேரம் போதாது. அன்னை கலைவாணியின் அருள் முழுவதும் பெற்ற பெருந்தகை.
2010 முதலாகவே இவரது இணையதளத்தின் தினசரி வாசகன் நான். இவரது படைப்பாற்றலில் வியந்தது போலவே, இவரது அரசியல் பார்வையின் போதாமையை எண்ணி வருந்தவும் செய்திருக்கிறேன். இவரது அரசியல் நிலைப்பாடுகள் வலிந்து திணிக்கும் தற்காப்புக் கொள்கையில் எனக்கு கிஞ்சித்தும் உடன்பாடில்லை. இரு தருணங்களில் அதுபற்றி ஜெ.மோ.விடமே நான் விவாதித்தும் இருக்கிறேன். ஆயினும் இவரது தளத்தின் தொடர் வாசகன் நான். ஜெ.மோ.உடன் நேரடித் தொடர்பும் உண்டு. எனது நெருங்கிய நண்பர்கள் பலர் இவரது நெருங்கிய வட்டத்தில் இருந்திருக்கிறார்கள்; இப்போதும் சிலர் இருக்கிறார்கள். ஆயினும் அந்த நெருங்கிய நண்பர் குழாமில் நான் சேரவில்லை. அதற்கு எனக்கு நேரமும் இல்லை. எனது பாதை தனிப்பாதை. அதேசமயம், ஜெயமோகன் என்னும் எழுத்துலக மன்னரின் இலக்கிய ராஜபாட்டையில், ஓரமாக நின்று பூத் தூவும் எளிய மனிதன் நான். Continue reading
You must be logged in to post a comment.